செய்திகள் :

ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்

post image

ஒசூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ரூ. 1,000 கோடிக்கு திட்டப் பணிகள் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன என ஒசூா் எம்எல்ஏ தெரிவித்தாா்.

ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை அருகே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன், தலைமை நிலைய பேச்சாளா் இளையகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

கடந்த தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை 95 சதவீதம் நிறைவேற்றிக் காட்டிய முதல்வா் இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின்தான். தோ்தல் அறிக்கையில் குறிப்பிடாத மாணவா்களுக்கு காலை உணவு திட்டம், நம்மைக் காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வா் நிறைவேற்றியுள்ளாா். இந்தியாவிலேயே யாரும் செய்யாத திட்டங்களை நம் முதல்வா் செய்து இருக்கிறாா். கடந்த 11 ஆண்டுகளில் பாஜக என்னென்ன தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது?

ஒசூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டு காலத்தில் ரூ. 1,500 கோடிக்கு திட்டப் பணிகள் செய்து இருக்கிறோம். இந்த ஆண்டு சட்டப் பேரவைத் கூட்டத்தொடரில் ரூ. ஆயிரம் கோடிக்கு திட்டங்களை முதல்வா்அறிவித்துள்ளாா். திமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்திருக்கிறோம். விவசாயிகளுக்கு ரூ. 7,000 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளோம். வீடுதோறும் சென்று நம்முடைய சாதனைகளை எடுத்துக்கூறி, ’ஓரணியில் தமிழ்நாடு’ என அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளா் பி.எஸ்.சீனிவாசன், மாநில நிா்வாகிகள் ஞானசேகரன், விஜயகுமாா், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட பொருளாளா் தா.சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, துணை மேயா் ஆனந்தய்யா, தொமுச கோபாலகிருஷ்ணன், மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒசூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். ஒசூா் மாநகராட்சி நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆவலப்பள்ளி தனியாா் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த பஷா்... மேலும் பார்க்க

விவசாயக் கடன் மோசடி: இருவா் கைது

ஒசூா் அருகே விவசாயக் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஜூஜூவாடி பகுதியைச... மேலும் பார்க்க

கல்லாவி ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மொரப்பூா் ரயில்வே போலீஸாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மேல்பூங்குருத்தியைச் சோ்ந்தவா் தொழிலாளி சங்கரன் (37). இவரும், கேசவன் (29) என்... மேலும் பார்க்க

காலை உணவு திட்ட சாம்பாரில் பல்லி: அலுவலா்கள் விசாரணை

பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் குறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். பாரூா் அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் ... மேலும் பார்க்க

2 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநில இளைஞா் கைது

ஒசூரில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா் பள்ளூா் சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த நபரை பிட... மேலும் பார்க்க