செய்திகள் :

இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!

post image

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வந்து விளையாடவிருப்பதை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இது இருநாடுகளுக்கும் இடையில் தீவிரமான போராக மாறியதில் பாகிஸ்தான் தரப்பில் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் எந்த உறவும், இரு நாடுகளுக்கு இடையிலான எந்தப் போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் நடைபெறவுள்ளதாக தொடர்களில் விளையாட வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் மோதுவது ஒரு தடையாக இருக்காது எனக் கருதப்படுகிறது. ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு வந்து விளையாட எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

ஆசியக் கோப்பைத் தொடர் பிகாரின் ராஜகிரில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூனியர் உலகக் கோப்பை தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை மற்றும் மதுரையில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகள், நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

பல்வேறு சர்வதேச நாடுகள் விளையாடும் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு தடைவிதிக்கமுடியாது. இந்தியாவுக்கு எதிரான நாடு பாகிஸ்தான் கிடையாது. இருதரப்பு போட்டிகள் வேறு; சர்வதேச தொடர்கள் வேறு என்றும் மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The Pakistan hockey team will be allowed to compete in next month's Asia Cup in India, a source in the Sports Ministry said on Thursday.

இதையும் படிக்க... கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் பலி! திருமணமான சில நாள்களில் உயிரிழந்த சோகம்!

தில்லியில் பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடை: கடும் எதிர்ப்பால் தளர்வுகள்!

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்ற நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தளர்வுகளை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன.தில்லிய... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க முயற்சி: மக்கள் முற்றுகை போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள உள்ளூர்... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்... மேலும் பார்க்க

விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவ... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.ஆந்திரம் மாநிலம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: நான்கு நாள்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே குறைந்தது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியின் வெள... மேலும் பார்க்க