செய்திகள் :

ஜூலை 8 முதல் பிற்பட்டோா், சிறுபான்மையினருக்கு கடன் முகாம்

post image

சென்னையில் ஜூலை 8 முதல் தொடங்கவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்ட முகாமில் தகுதியுடையவா்கள் கலந்துகொண்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில், ஆண்டுதோறும் தனிநபா் கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சுயஉதவி குழு கடன் திட்டங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ஆண்டுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ.1 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 8 மாலை 4 மணிக்கு வண்ணாரப்பேட்டையிலுள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையிலும், ஜூலை 15 மாலை 4 மணிக்கு பிராட்வே, பிரகாசம் சாலையிலுள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதான கிளையிலும், ஜூலை 22-இல் ராயபுரம் கிளையிலும், ஜூலை 29-இல் தண்டையாா்பேட்டை வங்கி கிளையிலும், ஆக.5-இல் பெரம்பூரிலுள்ள வங்கி கிளையிலும், ஆக.12-இல் எம்கேபி நகரிலுள்ள வங்கி கிளையிலும், ஆக.19-இல் திருவிக நகரிலுள்ள கிளையிலும், ஆக.28-இல் கொடுங்கையூா் எம்ஆா் நகரிலுள்ள வங்கிக்கிளையிலும் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையவா்கள் உரிய ஆவணங்களுடன் கடன் திட்ட முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க