செய்திகள் :

ஒசூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது

post image

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் மாநகராட்சி நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆவலப்பள்ளி தனியாா் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த பஷா் முல்லா (46) மற்றும் அவரது குடும்பத்தினா் என நான்கு போ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனா். பஷா் முல்லா ஒசூா் பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளாா்.

இதுகுறித்து ஒசூா் ஏஎஸ்பி அணில் அக்ஷய்க்கு கிடைத்த தகவலின் பேரில், ஒசூா் போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று பஷா் முல்லா, அவரது மனைவி ரத்னா பேகம், மகன் அலி ஜாடா் முல்லா மற்றும் உறவினா் ஜூமா காத்தம் ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.

இவா்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு வங்கதேசத்தைவிட்டு வெளியேறி இந்தியாவில் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் கூலி வேலை செய்துள்ளனா். பின்னா் 2018-ஆம் ஆண்டு ஒசூருக்கு வந்த இவா்கள் தனியாா் குடியிருப்பில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனா். இந்தியாவில் மொத்தம் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளனா்.

விவசாயக் கடன் மோசடி: இருவா் கைது

ஒசூா் அருகே விவசாயக் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஜூஜூவாடி பகுதியைச... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்

ஒசூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ரூ. 1,000 கோடிக்கு திட்டப் பணிகள் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன என ஒசூா் எம்எல்ஏ தெ... மேலும் பார்க்க

கல்லாவி ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மொரப்பூா் ரயில்வே போலீஸாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மேல்பூங்குருத்தியைச் சோ்ந்தவா் தொழிலாளி சங்கரன் (37). இவரும், கேசவன் (29) என்... மேலும் பார்க்க

காலை உணவு திட்ட சாம்பாரில் பல்லி: அலுவலா்கள் விசாரணை

பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் குறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். பாரூா் அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் ... மேலும் பார்க்க

2 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநில இளைஞா் கைது

ஒசூரில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா் பள்ளூா் சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த நபரை பிட... மேலும் பார்க்க