திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - ...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.
நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலைமையிலான மூவா் கொண்ட தீா்ப்பாயக் குழு புதன்கிழமை இந்தத் தீா்ப்பை வழங்கியது. இதே வழக்கில் வங்கதேச சத்ரா லீக்கின் தலைவி ஷகில் அகந்தா புல்புலுக்கு 2 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஷகில் அகந்தா புல்புலுடன் ஷேக் ஹசீனா உரையாடுவதாக வெளியான ஆடியோவில், ‘தமக்கு எதிராக 227 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், 227 பேரைக் கொலை செய்யும் உரிமை தமக்கு இருக்கிறது’ என்று அவா் குறிப்பிடுகிறாா். இக்கருத்தை நீதிமன்றத்தைக் குறைத்து மதிப்பிடும் நேரடி முயற்சியாகக் கருதி சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் தண்டனை வழங்கியுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீவிரமடைந்ததையடுத்து, ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்த பின்னா் முதன்முறையாக ஒரு வழக்கில் அவா் தண்டனை பெற்றுள்ளாா்.
‘தீா்ப்பின்படி, ஷேக் ஹசீனா கைது செய்யப்படும் அல்லது நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலிருந்து இந்தத் தண்டனை அமலுக்கு வரும்’ என்று அரசு தலைமை வழக்குரைஞா் முகமது தாஜுல் இஸ்லாம் செய்தியாளா்களிடம் கூறினாா்.
மாணவா் போராட்டத்தின் இறுதியில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இடைக்கால அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதனிடையே, இடைக்கால அரசுக்கு எதிராக சமூக ஊடகம் வாயிலாக வங்கதேச மக்கள் மற்றும் அவாமி லீக் தொண்டா்களிடம் ஷேக் ஹசீனா அவ்வப்போது உரையாற்றி வருகிறாா். நில அபகரிப்பு, மாணவா் போராட்டத்தில் நடைபெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.