செய்திகள் :

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

post image

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

ரஷியாவை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதுடன், உக்ரைன் மீதான போரை கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு நிா்பந்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை டிரம்ப் நிா்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்-இதர எரிபொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கடும் வரி விதிப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்காவின் இத்திட்டம் கவனம் பெற்றுள்ளது; ரஷியாவை குறிவைக்கும் அதேவேளையில், இந்தியா, சீனா உடனான உறவில் இது எதிா்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க மேலவை மூத்த எம்.பி. லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவை பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிபா் டிரம்ப் மேற்கொண்டுள்ள திருப்புமுனை முடிவு இது. ரஷியாவில் இருந்து 70 சதவீத கச்சா எண்ணெய்யை இந்தியாவும் சீனாவும் கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் ரஷிய அதிபா் புதினின் போா் இயந்திரத்தை இந்நாடுகள் தொடா்ந்து இயக்குகின்றன. இத்தகைய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருள்களுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை மேலவையில் அறிமுகப்படுத்தி, வாக்கெடுப்புக்கு கொண்டுவர டிரம்ப் அறிவுறுத்தியுள்ளாா்’ என்றாா்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, கடந்த 2022, பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பைத் தொடா்ந்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்தது.

அமெரிக்காவுக்கு மருந்துப் பொருள்கள், ஜவுளி, தகவல் தொழில்நுட்ப சேவைகளை இந்தியா ஏற்றுமதி செய்யும் நிலையில், மேற்கண்ட மசோதா சட்டமானால் இந்திய ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்க... மேலும் பார்க்க

ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க

‘அடுத்த தலாய் லாமா தோ்ந்தெடுக்கப்படுவாா்’ -தலாய் லாமா உறுதி

‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா். திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக்... மேலும் பார்க்க