செய்திகள் :

எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!

post image

பாஜக தலைமையிலான தில்லி அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.

தலைநகரில் பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்குத் தடைவிதிக்கும் நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாஜக அரசு இந்த நடவடிக்கையை ஆதரித்து, மாசுக் கட்டுப்பாட்டு முயற்சிகளில் இது ஒரு அவசியமான நடவடிக்கை என்று கூறிய நிலையில் சிசோடியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா கூறுகையில்,

தில்லியின் சாலைகளிலிருந்து 61 லட்சம் வாகனங்களை அகற்ற பாஜக அரசு ஒரு கொடுங்கோல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தங்கள் வாகனங்களைக் கவனமாகப் பராமரித்த குடும்பங்கள் தற்போது தண்டிக்கப்படுகின்றன. 10 ஆயிரம் கி.மீட்டருக்கும் குறைவான தூரம் பயணித்த வாகனங்களும் தகுதியற்றதாகக் கருதப்படுகின்றன,

அதோடு உத்தரவை மீறிச் செயல்படுவோர் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 அபராதமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் என்ன? வாகன உற்பத்தியாளர்களுக்கா? பழைய இரும்பு சரக்கு வியாபாரிகளுக்கா அல்லது நம்பர் பிளேட் நிறுவனங்களுக்கா? இதனால் யாருக்கு லாபம்? என்று கேள்வி எழுப்பினார்.

டாக்ஸி கட்டணம் அதிகரிக்க அனுமதிக்கப்படுவதற்குச் சற்று முன்பு இந்த உத்தரவு வந்தது தற்செயலானதா? இது பாஜகவின் பாசாங்குத்தனம் என்று குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு உத்தரவை ஒரே இரவில் அவசரச் சட்டத்தின் மூலம் மீறியுள்ளனர். இப்போது 61 லட்சம் தில்லி குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Senior AAP leader and former Delhi deputy chief minister Manish Sisodia on Thursday accused the BJP-led Delhi government of waging another "assault on the middle class" through its recent order banning refuelling of overage vehicles in the capital.

மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூ... மேலும் பார்க்க

பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!

பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், ஆதார் எண்ணும் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுநாள்வரையில், பான் கார்டு விண்ணப்பிக்க பிறப்பு அல்லது அடையாளச் சான்று மட்டுமே போதுமானதாக இருந்து வந்த... மேலும் பார்க்க

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க