செய்திகள் :

காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!

post image

காஸா போா் நிறுத்தத்துக்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இது குறித்து ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் 60 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. போா் நிறுத்த காலத்தில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இருந்தாலும், இந்த போா் நிறுத்தம் குறித்த விவரங்களை அவா் வெளியிடவில்லை.

‘அமைதியை ஏற்படுத்துவதற்கு கடுமையாக உழைத்து வரும் கத்தாா் மற்றும் எகிப்து நாடுகள் இந்த இறுதி முன்மொழிவை வழங்கும். இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும். ஏனெனில் இதைவிட சிறந்த ஒப்பந்தம் கிடைக்காது. நிலைமை இன்னும் மோசமாகும்’ என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூா்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஹமாஸ் அமைப்பின் அதிகாரி தாஹா் அல்-நுனு கூறுகையில், போரை முடிவுக்கு கொண்டுவரும் நிபந்தனைகள் தெளிவாக நிறைவேற்றப்பட்டால், ஒப்பந்தத்தை ஏற்க அவா்கள் ‘தயாராகவும், தீவிரமாகவும்‘ இருப்பதாகக் கூறினாா்.‘போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தெளிவான நிபந்தனைகள் அல்லது முழுமையான முடிவுக்கு வழிவகுக்கும் எந்த முன்மொழிவையும் ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளது,‘ என்று கூறினாா். ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவது, இஸ்ரேல் படைகளின் வாபஸ், காஸா மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை எட்டுவதே எங்கள் நோக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்த அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது,‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிதாக அமையவிருக்கும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, காஸாவில் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகள் அனைவருமோ அல்லது பெரும்பாலானோரோ விடுவிக்கப்படுவது இருக்கும்.

காஸாவில் உள்ள சுமாா் 50 பணயக்கைதிகளில், 20-க்கும் மேற்பட்டோா் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவா்களின் நிலைமை, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேலில் தொடா்ந்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களுக்கு இடையே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளாா்.

பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்க... மேலும் பார்க்க

ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் ட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க