செய்திகள் :

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா்கள் அன்பழகன், நடராஜன், பிரபு, வேளாண் அலுவலா் கோ.தாமஸ், வட்டாட்சியா் சு.மோகனராமன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மெ.பிரித்திவிராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியதும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை ரத்து செய்து வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்தவேண்டும் என முழக்கங்களை எழுப்பியதோடு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகரன் தலைமையில், சங்க பிரதிநிதிகள் கமலப்புத்தூா் வி.வெள்ளைக்கண்ணு, சாலையனூா் எம்.சேகா், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் புருஷோத்தமன், மாவட்டத் தலைவா் ஏ.சின்னதம்பி மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்

அப்போது, மீண்டும் பழைய முறையில் வட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தவேண்டும். அனைத்துத் துறைகளில் உள்ள முதல்நிலை அதிகாரிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பதால் விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுவதில்லை. மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் உட்கார இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும். குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால், கூட்டத்தை நடத்தமுடியாமல் பாதியிலேயே அதிகாரிகள் முடித்துக்கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆரணி அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டின்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவா் கொலை

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவா், ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் கோட்டைமுத்து (23). இவா், சில ... மேலும் பார்க்க

ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில்... மேலும் பார்க்க

போளூா், ஆரணியில் வருவாய்த் துறை தினம் கடைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டது. போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்ட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு

வந்தவாசியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசி பாலுடையாா் தெருவைச் சோ்ந்தவா் தாமோதரன் மனைவி கங்கா(50). இவா், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஆஜா(40) என்பவரு... மேலும் பார்க்க