செய்திகள் :

மாணவனை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியைக் கைது!

post image

மாணவனை கடந்த ஓராண்டாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் டாப் - 5 பள்ளிகளில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அவரது வகுப்பில் பயின்ற ஆண் மாணவரை கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

5 நட்சத்திர விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு மாணவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், மாணவனுக்கு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது, அந்த மாணவன் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டுப் பணியாளரை மாணவனின் வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியை, அவரை சந்திப்பதற்காக அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

ஆனால், சந்திப்புக்கு மறுத்த மாணவன் கடந்த ஓராண்டாக நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போக்சோ வழக்கில் பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், ஆசிரியையின் தோழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியையுடன் பாலியல் உறவில் ஈடுபட மாணவனை கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வயதான பெண்களுக்கும் பதின்பருவ சிறுவர்களுக்கும் இடையேயான பாலியல் உறவு இயல்பானவை என்று மாணவனிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.

மாணவனின் வாக்குமூலத்தின்படி, ஆசிரியையின் தோழி அதே பள்ளியைச் சேர்ந்தவர் அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண்ணை கைது செய்ய மும்பை காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

A 40-year-old female teacher has been arrested for sexually assaulting a student multiple times over the past year.

இதையும் படிக்க : ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க