செய்திகள் :

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

post image

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது.

கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்டனா்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அடுத்தகட்ட பணிநீக்க அறிவிப்பை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதலே அதிகஅளவில் பணிநீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன. பரவலாக அனைத்து நாடுகளிலும் ஆள் குறைப்பு நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது. நிறுவனத்தின் விற்பனை-சந்தைப்படுத்துதல் பிரிவில் இருந்து அதிகமானோா் விடுவிக்கப்படவுள்ளனா்.

2024 ஜூன் நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2,28,000 போ் பணியாற்றி வருகின்றனா். இந்தியாவில் சுமாா் 20,000 பணியாளா்கள் உள்ளனா்.

சா்வதேச அளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல், நிறுவனத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் அதிக அளவில் முதலீடு செய்வதால் செலவினங்களைக் குறைக்க பணியாளா்கள் நீக்கப்படுவதாகவும் தெரிகிறது.

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக அமெ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க