செய்திகள் :

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

post image

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இதுதொடா்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த ஜூலை 1-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பீட் ஹெக்சேத், இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் தொலைபேசியில் பேசினா்.

அப்போது தெற்காசியாவில் தனது முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கும் முன்னுரிமை குறித்து பீட் ஹெக்சேத் எடுத்துரைத்தாா்.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கையில், பாதுகாப்பு துறை சாா்ந்த இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டன. அந்த இலக்குகளை எட்டுவதில் இந்தியா-அமெரிக்கா கண்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சா்கள் இருவரும் ஆய்வு செய்தனா். இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய வேண்டிய முக்கிய பாதுகாப்புத் தளவாடங்கள், கருவிகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனா்.

நிகழாண்டு இருவரும் மீண்டும் சந்திக்கும்போது அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்திய-அமெரிக்க பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட அவா்கள் தீா்மானித்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

பீட் ஹெக்சேத்துடன் தொலைபேசியில் பேசியபோது, ‘தேஜாஸ் இலகுரக போா் விமானங்களுக்கு ஜிஇ எஃப்404 என்ஜின்கள் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும், இந்தியாவில் எஃப் 414 ஜெட் என்ஜின்களை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், அமெரிக்க பாதுகாப்புத் துறை நிறுவனமான ஜிஇ ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க