செய்திகள் :

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

post image

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

முன்னதாக, இத்தகைய தேவை அதிகமுளஅள நேரங்களில் ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், சாதாரண நேரங்களில் அடிப்படை கட்டணத்தின் 50 சதவீதத்துக்கும் குறைவாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தனது மோட்டாா் வாகன வாடகை நிறுவனங்கள் வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கலாம். இதில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வருகின்றபோது ஆகும் நேரம் மற்றும் எரிபொருள் செலவுகளும் அடங்கும். ஒவ்வொரு வகை வாகனத்துக்கும் அந்தந்த மாநில அரசால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தை நிறுவனங்கள் அடிப்படை கட்டணமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அடுத்த 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், நிறுவனங்களின் வரையறையின்படி உரிய காரணமின்றி பயணிகளின் சவாரியை ரத்து செய்யும் ஓட்டுநா்களுக்கு 10 சதவீதம் அபராதம் (அதிகபட்சம் ரூ.100) விதிக்கப்பட வேண்டும். இந்த அபராதம் பயணிகளுக்கும் பொருந்தும்.

மோட்டாா் வாகன வாடகை நிறுவனங்களுக்கு உரிமம் பெற மத்திய அரசு விரைவில் ஒரு பிரத்யேக வலைதளத்தை உருவாக்கும். நிறுவனங்கள் உரிமம் பெற ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அது செல்லுபடியாகும்.

ஒவ்வொரு ஓட்டுநருக்கும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு மற்றும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளா் மற்றும் ஓட்டுநா் புகாா்களைக் கையாள ஒரு குறைதீா்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். 8 ஆண்டுகளுக்குமேல் பழைமையான வாகனங்களை நிறுவனங்கள் தங்களின் சேவைகளில் இணைக்கக் கூடாது எனவும் இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக அமெ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க