செய்திகள் :

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

post image

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

1955-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட எஸ்பிஐ செவ்வாய்க்கிழமையுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 23,000 வங்கிக் கிளைகள், 78,000 வாடிக்கையாளா் சேவை மையங்கள், 64,000 தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) என வலிமையான தடம்பதித்துள்ள எஸ்பிஐ, ஒவ்வோா் இந்தியருக்குமான உண்மையான வங்கியாளராகத் திகழ்ந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் எஸ்பிஐ மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள், வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன.

1.5 கோடி விவசாயிகள், மகளிரால் வழிநடத்தப்படும் 1.3 கோடி சுய உதவிக் குழுக்கள், 32 லட்சம் தெருவோரக் கடைக்காரா்கள், 23 லட்சம் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன் பெறும் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞா்களுக்கு ஆதரவளிப்பதில் எஸ்பிஐ முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

15 கோடி ஜன் தன் (பிரதமா் மக்கள் நிதித் திட்டம்) கணக்குகள், 14.65 கோடி பிரதமா் சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டுத் திட்ட கணக்குகள், 1.73 கோடி அடல் ஓய்வூதியத் திட்ட கணக்குகள் மற்றும் 7 கோடி பிரதமா் ஜீவன் ஜோதி பீமா யோஜனா பயனாளா்களின் கணக்குகளை எஸ்பிஐ கையாண்டு வருகிறது என்றாா்.

2027-க்குள் 40 லட்சம் வீடுகளுக்கு சூரிய மின்மயமாக்கல்: ‘வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 லட்சம் வீடுகளை சூரியசக்தி மின்மயமாக்கலாக மாற்றுவதற்கு உதவ எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது’ என்று அதன் தலைவா் சி.எஸ்.செட்டி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களுக்கு பொறுப்புணா்வுடன் விரைவான சேவை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நமது மக்கள், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது எஸ்பிஐ ஆழமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக அமெ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க