செய்திகள் :

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

post image

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 9.15 மணிமுதல் பிற்பகல் 3.15 மணிவரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதையடுத்து மூர் மார்கெட் மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் இன்று மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும், மறுவழித்தடத்தில் கடற்கரையில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் வசதிக்காக மூர் மார்கெட் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து பொன்னேரி, மிஞ்சூர் மற்றும் எண்ணூர் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இன்று இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway has announced that 38 electric train services operating on the Gummidipoondi route will be cancelled on Thursday.

இதையும் படிக்க : காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது! -ஏடிஜிபி உத்தரவு

காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது என தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக... மேலும் பார்க்க