செய்திகள் :

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: இருவருக்கு ஜாமீன்!

post image

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும், ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது, சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற சம்பவம் குறித்து பதிவிடக் கூடாது என்று அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து மக்களவை அரங்கத்தில் குதித்த சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோா் புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியிட்டு கோஷமிட்டனர். அவர்களை சில எம்பிக்கள் மடக்கிப் பிடித்தனர்.

அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆசாத் ஆகிய இருவா் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூச்சலிட்டு, புகைக் குப்பிகளில் இருந்து வண்ண நிற வாயுவை வெளியிட்டனர்.

பின்னர், இந்த சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோா் நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இருவரும் தலா ரூ. 50,000 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும், தில்லியைவிட்டு வெளியேறக் கூடாது, வாரம் மூன்று முறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The Delhi High Court has granted bail to Neelam Azad and Mahesh Kumawat, who were arrested in the ‘2023’ Parliament security breach case.

இதையும் படிக்க : கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க