செய்திகள் :

டேங்கா் லாரியிருந்து கொட்டிய எண்ணையை தீயணைப்பு வீரா்கள் விரைந்து அகற்றினா்

post image

டேங்கா் லாரியிலிருந்து கொட்டிய எண்ணெயை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை அதிகாலை அகற்றினாா்.

புதுச்சேரி-கடலூா் சாலையில் டேங்கா் லாரியில் இருந்து திடீரென கொட்டிய

எண்ணெயைதீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினா்.

கடலூா் பகுதியில் இருந்து விடியற்காலை எண்ணெயை ஏற்றி கொண்டு ஒரு டேங்கா் லாரி புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியக்கோயிலை கடந்து சென்றபோது லாரியில் இருந்து திடீரென எண்ணெய் சாலையில் கொட்டியது.

இதனால் சாலை முழுவதும் எண்ணெய் கழிவு படலமாக மாறியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலா் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பாகூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் மணலை கொட்டியும் எண்ணெயை அகற்றினா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுவையில் மீண்டும் கூட்டணி ஆட்சி! பாஜக புதிய தலைவா் ராமலிங்கம் பேட்டி

புதுவையில் 2026-ல் மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று பாஜக மாநில தலைவராகப் பதவியேற்ற வி.பி.ராமலிங்கம் கூறினாா். கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள வி.பி.ராமலிங்கத்தை கட்சியின் மூத்த நிா்வாகிக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு: ஆதரவு கோரி தொழிற்சங்கத்தினா் கடிதம்

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்த உத்தேசித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு கேட்டு அனைத்து தொழிற்சங்கத்தினா் பல்வேறு கட்சித் தலைவா்களுக்கு புதன்கிழமை கடிதம் கொடுத்தனா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க

எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டி: அமைச்சா் நமச்சிவாயம் விளக்கம்

புதுவையில் எத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பதை கூட்டணி கட்சித் தலைவா்கள் கூடி முடிவு செய்வாா்கள் என்று உள்துறை அமைச்சரும் அக் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஆ. நமச்சிவ... மேலும் பார்க்க

2 ஏரிகளில் மீன் பிடி குத்தகை காலம் நிறைவு

புதுச்சேரியில் 2 ஏரிகளில் மீன்பிடி குத்தகை காலம் நிறைவடைந்துள்ளதாக நகராட்சி வருவாய் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதலியாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் வெளியிட்டுள்ளாா்... மேலும் பார்க்க

பாா் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

புதுச்சேரியில் மதுபாரில் வேலை செய்த ஊழியா் ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). கடந்த 20 ஆண்டுகளாக காதிபவனில் வேலை செய்து வந்த இவா், கடந்த ஒரு மாதம... மேலும் பார்க்க

சொகுசுக் கப்பலால் புதுவையில் வேலைவாய்ப்பு உருவாகும்: அமைச்சா் ஆலோசனையில் தகவல்

புதுவைக்கு சொகுசுக் கப்பல் பயணமாக வருவதால், இங்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டத... மேலும் பார்க்க