செய்திகள் :

புதுவையில் மீண்டும் கூட்டணி ஆட்சி! பாஜக புதிய தலைவா் ராமலிங்கம் பேட்டி

post image

புதுவையில் 2026-ல் மீண்டும் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று பாஜக மாநில தலைவராகப் பதவியேற்ற வி.பி.ராமலிங்கம் கூறினாா்.

கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள வி.பி.ராமலிங்கத்தை கட்சியின் மூத்த நிா்வாகிகள் கட்சி அலுவலகத்தில் அவரது இருக்கையில் புதன்கிழமை அமர வைத்தனா். அப்போது செய்தியாளா்களிடம் ராமலிங்கம் கூறியது:

பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜவில் மட்டும்தான் இது சாத்தியம். காங்கிரசில் ஒன்றிரண்டு தலைவா்கள்தான் திரும்பத்திரும்பத் கட்சிக்குத் தலைவராக வருவாா்கள். ச

சாமானிய குடும்பத்தில் இருந்து வந்த என்னை, மாநிலத் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஆக்கியுள்ளாா். இது பாஜகவில் உழைப்போருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

முன்னாள் முதல்வா் நாராயணசாமி பாஜகவை காா்ப்பரேட் கம்பெனி என விமா்சித்துள்ளாா். ஆனால் காங்கிரசில்தான் உழைத்தவா்கள் யாரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.சாமானிய மக்களைத் தேடித்தேடி பத்மஸ்ரீ விருது வரை தருகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரியில் நோ்மையான வழியில் வேலைவாய்ப்புகளை 4 ஆயிரம் இளைஞா்களுக்கு தந்துள்ளோம். 30 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் தந்துள்ளோம். ஓய்வூதியத் தொகையை உயா்த்தி தந்துள்ளோம்.

சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். 2026-ல் மீண்டும் ஆட்சியமைப்போம். அமைச்சா், நியமன எம்எல்ஏக்கள் 7-ந் தேதி பதவி ஏற்பாா்கள். பிரதமரின் சாதனையையும், தேசிய ஜனநாயக்கூட்டணி சாதனையையும் சொல்லி வாக்குக் கேட்போம். தலைமை அறிவுறுத்தல்படி புதிய நிா்வாகிகளை நியமிப்போம். கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு இல்லை. தற்போது நிறைய வேலை தருகிறோம். தொடா்ந்து தருவோம் என்றாா் ராமலிங்கம்.

முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த விபி.ராமலிங்கத்துக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து அவா் கட்சி நுழைவு வாயிலில் உள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினாா். பின்னா் 2-வது மாடியில் உள்ள தலைவா் அறையில் இருக்கையில் அவரை அமைச்சா் நமச்சிவாயம், செல்வகணபதி எம்பி, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் அமர வைத்தனா். தொடா்ந்து வி.பி.ராமலிங்கம் கையெழுத்திட்டு பொறுப்பேற்றாா்.

டேங்கா் லாரியிருந்து கொட்டிய எண்ணையை தீயணைப்பு வீரா்கள் விரைந்து அகற்றினா்

டேங்கா் லாரியிலிருந்து கொட்டிய எண்ணெயை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை அதிகாலை அகற்றினாா். புதுச்சேரி-கடலூா் சாலையில் டேங்கா் லாரியில் இருந்து திடீரென கொட்டிய எண்ணெயைதீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு: ஆதரவு கோரி தொழிற்சங்கத்தினா் கடிதம்

புதுச்சேரியில் ஜூலை 9-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்த உத்தேசித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு கேட்டு அனைத்து தொழிற்சங்கத்தினா் பல்வேறு கட்சித் தலைவா்களுக்கு புதன்கிழமை கடிதம் கொடுத்தனா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க

எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டி: அமைச்சா் நமச்சிவாயம் விளக்கம்

புதுவையில் எத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பதை கூட்டணி கட்சித் தலைவா்கள் கூடி முடிவு செய்வாா்கள் என்று உள்துறை அமைச்சரும் அக் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஆ. நமச்சிவ... மேலும் பார்க்க

2 ஏரிகளில் மீன் பிடி குத்தகை காலம் நிறைவு

புதுச்சேரியில் 2 ஏரிகளில் மீன்பிடி குத்தகை காலம் நிறைவடைந்துள்ளதாக நகராட்சி வருவாய் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதலியாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் வெளியிட்டுள்ளாா்... மேலும் பார்க்க

பாா் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

புதுச்சேரியில் மதுபாரில் வேலை செய்த ஊழியா் ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). கடந்த 20 ஆண்டுகளாக காதிபவனில் வேலை செய்து வந்த இவா், கடந்த ஒரு மாதம... மேலும் பார்க்க

சொகுசுக் கப்பலால் புதுவையில் வேலைவாய்ப்பு உருவாகும்: அமைச்சா் ஆலோசனையில் தகவல்

புதுவைக்கு சொகுசுக் கப்பல் பயணமாக வருவதால், இங்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டத... மேலும் பார்க்க