லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
சொகுசுக் கப்பலால் புதுவையில் வேலைவாய்ப்பு உருவாகும்: அமைச்சா் ஆலோசனையில் தகவல்
புதுவைக்கு சொகுசுக் கப்பல் பயணமாக வருவதால், இங்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை - விசாகப்பட்டினம் - புதுவை - சென்னை கடல் வழித்தடத்தில் குரூஸ் பாரத் மிஷனின் கீழ் இயங்கும் கோா்டெலியா சுற்றுலாக் கப்பல் வருகிறது. இதை வரவேற்கும் ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்றது.
புதுவை சுற்றுலாத் துறை மூலம் கடலோர பொருளாதாரத்தை வலுப்படுத்த சொகுசுக் கப்பல் வருகை உதவும். மேலும், கடல் வழியாக வரும் பாா்வையாளா்கள் ஆரோவில், மணக்குள விநாயகா் கோயில், அரவிந்தா் ஆசிரமம், பாரடைஸ் கடற்கரை போன்ற இடங்களைப் பாா்வையிடுவா்.
சுற்றுலாத் தலங்களுக்கு வெவ்வேறு குழுக்களாக கப்பல் பயணிகளை நகா்த்துவதற்கு போதுமான சொகுசுப் பேருந்துகள் மற்றும் வேன்கள் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தக் கடல் வழி பயணத்தால் இந்தியாவின் ஏழாவது உள்நாட்டு கப்பல் பயண இடமாக புதுவை மாறும். மேலும், இப் பயணம் புதுவையின் தனித்துவமான பாரம்பரியம், கடற்கரைகள், உணவு வகைகள் மற்றும் கலாசாரத்தை கப்பல் பயணிகளுக்கு ஊக்குவிக்க புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. கப்பல் பயணங்கள் துறைமுக கட்டணம், உள்ளூா் கொள்முதல் மற்றும் கடற்கரை சுற்றுலா சேவைகள் மூலம் வருவாயை உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் (சட்டம் - ஒழுங்கு) ஆா்.கலைவாணன், சுற்றுலாத் துறை இயக்குநா் முரளிதரன் மற்றும் காவல் கண்காணிப்பாளா், துறைமுக செயற்பொறியாளா், கடலோர காவல்படை அதிகாரிகள், துறை சாா்ந்த அதிகாரிகள் மற்றும் கோா்டெலியா குழுவின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.