செய்திகள் :

"அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன்

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்
சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன்

இந்தச் சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசியிருக்கும் விசிக திருமாவளவன், "அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. காவல்துறையில் முரட்டுத்தனமான போக்கு நீடிப்பது வேதனை அளிக்கிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

குப்பைக்கூளம்... சுகாதார சீர்கேடு; மக்களை முகம் சுளிக்க வைக்கும் பிராட்வே பேருந்து நிலையம்!

சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட்ட பல்நோக்கு போக்குவரத்து வளாகமாக மேம்படுத்தப்பட இருப்பதால், தற்காலிகமாக ராயபுரத்தின் மேம்பாலாத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் பேரு... மேலும் பார்க்க

``என்னால் கூட ஆட்சியரிடம் பேச முடியவில்லை; சாமானிய மக்களின் நிலை..'' - MLA ஜெயசீலன் சொல்வதென்ன?

திஷா கமிட்டி எனப்படும் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உற... மேலும் பார்க்க

துர்கை கோயில் இடிப்பு; சாடிய இந்தியா... விளக்கமளித்த வங்கதேச அரசு!

வங்காளதேச நாட்டிலுள்ள டாக்காவிலிருக்கும் கில்கெட் பகுதியில் துர்கை கோயில் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்களை தெரிவித்துள்ளது வங்காளதேச அரசு. ரயில்வேவுக்கு சொந்தமாய் பாத்தியப்பட்ட நிலத்தில் ரயில்வே நி... மேலும் பார்க்க

Disney cruise: நடுக்கடலில் விழுந்த 5 வயது மகள்; சட்டென குதித்த தந்தையின் வீரச் செயல்| Viral Video

டிஸ்னி க்ரூஸ் லைன் கப்பல் அமெரிக்கா, சிங்கப்பூர், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாட்ட கப்பல் சுற்றுலாப் பயணத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பல பகுதிகளில் இந்தக் கப்பல் சு... மேலும் பார்க்க

'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' - எம்.பி சு.வெங்கடேஷன் சொல்வது என்ன?

எம்.பி சு.வெங்கடேஷன் இரயில் கட்டண உயர்வை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

பழனி : திருமண மண்டபம் கட்ட வெளியான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - நடந்தது என்ன?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த இந்து சமயப்... மேலும் பார்க்க