செய்திகள் :

``என்னால் கூட ஆட்சியரிடம் பேச முடியவில்லை; சாமானிய மக்களின் நிலை..'' - MLA ஜெயசீலன் சொல்வதென்ன?

post image

திஷா கமிட்டி எனப்படும் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூடலூர் சட்டமன்ற (தனி) தொகுதி எம்எல்ஏ (அதிமுக) ஜெயசீலன் பங்கேற்றுள்ளார்.

கலெக்டர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு

கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எம்எல்ஏ ஜெயசீலன், "நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் மனித -வனவிங்கு பிரச்னைகள் முதல் பழங்குடி மற்றும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளுக்கான‌ பிரச்னைகள் வரை நூற்றுக்கணக்கான பிரச்னைகள் இருக்கிறது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகள் அதிக அளவில் உள்ளன.

மக்களின் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், அவர் எந்த அழைப்பையும் ஏற்பதே கிடையாது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 12 முறை செல்போன் மூலம் அழைத்துள்ளேன். எந்த அழைப்பையும் அவர் ஏற்கவில்லை.

எம்.எல்.ஏ ஜெயசீலன்

பிஸியாக இருப்பார் என ஓய்வு நேரத்தையும்‌ கேட்டறிந்து அழைத்தேன். அப்போதும் ஏற்கவில்லை. என்பதால், நான் என்னுடைய தனிப்பட்ட தேவைக்காகவோ தனிப்பட்ட பிரச்னைக்காகவோ அழைக்கவில்லை. இரண்டு லட்சம் மக்களின் பிரதிநிதி என்கிற முறையிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் அழைக்கிறேன். ஆனால், அலட்சியமாக இருந்து வருகிறார். ஒரு எம்.எல்.ஏ- வாக இருக்கும் என்னால் கூட மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால் சாமானிய மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் " என கொந்தளித்தார்.

குப்பைக்கூளம்... சுகாதார சீர்கேடு; மக்களை முகம் சுளிக்க வைக்கும் பிராட்வே பேருந்து நிலையம்!

சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட்ட பல்நோக்கு போக்குவரத்து வளாகமாக மேம்படுத்தப்பட இருப்பதால், தற்காலிகமாக ராயபுரத்தின் மேம்பாலாத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் பேரு... மேலும் பார்க்க

"அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்,... மேலும் பார்க்க

துர்கை கோயில் இடிப்பு; சாடிய இந்தியா... விளக்கமளித்த வங்கதேச அரசு!

வங்காளதேச நாட்டிலுள்ள டாக்காவிலிருக்கும் கில்கெட் பகுதியில் துர்கை கோயில் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்களை தெரிவித்துள்ளது வங்காளதேச அரசு. ரயில்வேவுக்கு சொந்தமாய் பாத்தியப்பட்ட நிலத்தில் ரயில்வே நி... மேலும் பார்க்க

Disney cruise: நடுக்கடலில் விழுந்த 5 வயது மகள்; சட்டென குதித்த தந்தையின் வீரச் செயல்| Viral Video

டிஸ்னி க்ரூஸ் லைன் கப்பல் அமெரிக்கா, சிங்கப்பூர், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாட்ட கப்பல் சுற்றுலாப் பயணத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பல பகுதிகளில் இந்தக் கப்பல் சு... மேலும் பார்க்க

'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' - எம்.பி சு.வெங்கடேஷன் சொல்வது என்ன?

எம்.பி சு.வெங்கடேஷன் இரயில் கட்டண உயர்வை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

பழனி : திருமண மண்டபம் கட்ட வெளியான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - நடந்தது என்ன?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த இந்து சமயப்... மேலும் பார்க்க