செய்திகள் :

கொல்கத்தா சட்டக் கல்லூரியின் கதையையே மாற்றிய மோனோஜித்! அபாயப் பகுதியாக..

post image

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மோனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரும், வழக்குரைஞருமாக இருந்த மோனோஜித் மிஸ்ரா மற்றும் 2 மூத்த மாணவா்கள், கல்லூரி காவலாளி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த மோனோஜித் மிஸ்ரா, கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில், சட்டக் கல்லூரியின் ஆசிரியா் அல்லாத ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.

அது முதலே, கல்லூரியின் கதையே ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. பல்வேறு விவகாரங்களை அவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். பெண்களுக்கு அவர் கொடுத்த தொல்லைகள் காரணமாக, கல்லூரியில் மாணவிகளின் வருகையே சரிந்துள்ளது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரிக்குள் எந்த கட்டுப்பாடும் இன்றி சுற்றித்திரிந்த மோனோஜித், கண்ணில்படும் மாணவிகளை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கக் குழுக்களில் பதிவேற்றுவது, பல பெண்களை காதலிப்பதாகத் தொல்லை கொடுப்பது என இருந்துள்ளார்.

இது பற்றி தற்போது ஏராளமான மாணவிகள் மௌனம் கலைத்து மோனோஜித் பற்றி பேசி வருவதால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாணவிகளை மட்டுமல்லாமல் மாணவர்களையும் மோனோஜித் மிரட்டி, அடித்துத் துன்புறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கல்லூரியையும் அபாயப் பகுதியாக மாற்றியதாக மோனோஜித் மீது கல்லூரி மாணவ, மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏராளமான மாணவிகள் மோனோஜித் காரணமாக கல்லூரிக்குச் செல்வதையே தவிர்த்துவிட்டோம் என்று கூறுவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க