செய்திகள் :

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

post image

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப்புகள் நிகழ்வதாக செய்திகள் பரவிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் திடீர் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், கரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கு தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றின் ஆய்வில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதையும், மிகவும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

திடீர் மாரடைப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளன. வாழ்க்கை முறை, பிற நோய்கள் மற்றும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு ஏற்பட்ட பின்விளைவுகள்கூட இருக்கலாம்.

குறிப்பாக 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவர்களின் திடீர் மரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. கடந்த கால தரவுகளின் அடிப்படையில் மற்றும் நிகழ்கால மரணங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

"இந்தியாவில் 18 - 45 வயதுடையவர்களின் திடீர் மரணங்களுக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வு மே 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் 2021 முதல் மார்ச் 2023 வரை நலமுடன் இருந்த நிலையில், திடீரென்று உயிரிழந்தவர்களை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில், கரோனா தடுப்பூசிகள் திடீர் மரணங்கள் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தில்லி எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கான காரணத்தை கண்டறிய மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதிகளவிலான மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாகவும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. திடீர் மரணங்களுக்கு மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், இந்தியாவில் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் இல்லை எனத் தெரியவருகிறது. மரபணு மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறையே திடீர் மரணங்களில் அதிக பங்கு வகிக்கிறது.

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை என்பது அறிவியல்பூர்வமாக நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர். ஆதாரம் இல்லாத ஊகங்கள், கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றும் தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கும் அபாயம் உள்ளது. இது பொது சுகாதாரத்தை மோசமாக பாதிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

The matter of sudden unexplained deaths has been investigated through several agencies in the country. These studies have conclusively established that there is no direct link between COVID 19 vaccination and the reports of sudden deaths in the country.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க