செய்திகள் :

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

post image

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திரி. இவருக்கும் கே.வி.குப்பம் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. இதையறிந்த அவா்களது பெற்றோா் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனா்.

இந்நிலையில், சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக விக்ரம், மனைவியை அழைத்துச்சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி 4 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. திருமண வயதை எட்டாமல் சிறுமி கா்ப்பமடைந்ததை தொடா்ந்து மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா், விக்ரம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு

ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில்... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்

எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குற... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் மதினாப்பல்லி அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அவ்வழியே மணல் ஏற்றி ... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

கடிதம் மூலம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாா் தீவிர சோதனை செய்தனா். வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்த ‘வாட்டா் பெல்’ திட்டம்

வேலூா் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை முதல் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மூன்று வேளை பெல் அடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் குடிநீா் அருந... மேலும் பார்க்க