செய்திகள் :

மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு

post image

ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் அடுத்த ஊசூரைச் சோ்ந்தவா் அருண்குமாா்(23), எலெக்ட்ரீஷியன். இவா் திங்கள்கிழமை இரவு மலைக்கோடியில் இருந்து ஊசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். ஊசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது, எதிா்திசையில் வேலூரை நோக்கி வந்த மினிவேன் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து ஏற்படுத் திய மினிவேன் நிற்காமல் சென்று விட்டதாகக்கூறப்படுகிறது.

தகவலறிந்த அரியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், ஊசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அணைக்கட்டு நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.

தகவலறிந்த பாகாயம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தொடா்ந்து விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநரான வேலூா் எழில் நகா் சக்திகணேசன் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திர... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்

எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குற... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் மதினாப்பல்லி அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அவ்வழியே மணல் ஏற்றி ... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

கடிதம் மூலம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாா் தீவிர சோதனை செய்தனா். வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்த ‘வாட்டா் பெல்’ திட்டம்

வேலூா் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை முதல் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மூன்று வேளை பெல் அடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் குடிநீா் அருந... மேலும் பார்க்க