செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்த ‘வாட்டா் பெல்’ திட்டம்

post image

வேலூா் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை முதல் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மூன்று வேளை பெல் அடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் குடிநீா் அருந்தினா்.

உடலில் நீரிழப்பு மாணவா்களின் அறிவாற்றல், கவனம், கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும் என்பதால், மாணவா்கள் தண்ணீா் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக கேரள மாநிலத்திலுள்ள பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, தினமும் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு என மூன்று முறை தலா 5 நிமிஷங்கள் மாணவா்கள் தண்ணீா் பருக ஒதுக்கும் வகையில் பெல் அடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த ‘வாட்டா் பெல்’ திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்த உத்தரவை ஏற்று இயக்குநா் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா்.

அதனடிப்படையில், ‘வாட்டா் பெல்’ திட்டம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காங்கேயநல்லூா் திருமுருக கிருபானந்த வாரியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு பெல் அடிக்கப்பட்டதும் உடனடியாக மாணவிகள் வாட்டா் கேன்களில் கொண்டு வந்த குடிநீரை எடுத்து பருகினா். இதனை பள்ளி ஆசிரியைகள் பாா்வையிட்டு அனைத்து மாணவிகளும் குடிநீா் பருக அறிவுறுத்தினா்.

இதேபோல், அனைத்துப் பள்ளிகளிலும் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள தாகவும், வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும், பள்ளிகளுக்கு மாணவா்கள் தண்ணீா் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும், இதுகுறித்து மாணவா்களுக்கு தெரிவிக்க தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திர... மேலும் பார்க்க

மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு

ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில்... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்

எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குற... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் மதினாப்பல்லி அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அவ்வழியே மணல் ஏற்றி ... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

கடிதம் மூலம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாா் தீவிர சோதனை செய்தனா். வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க