செய்திகள் :

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

post image

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும் நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாகனங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பெட்ரோல் பம்புகளில் உள்ள கேமராக்களை பயன்படுத்துகின்றனர்.

அதாவது பம்புகளில் இருக்கும் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (Automatic Number Plate Recognition) கேமராக்களின் உதவியுடன் இந்த விதி செயல்படுத்தப்படுகிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் வாகனங்களை அகற்றும் அரசின் முடிவை சமூக ஊடக பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில், தனியார் டீசல் கார்களுக்கான சாலை வரி, 15 ஆண்டுகளுக்கு செலுத்தப்படுகிறது.

இருப்பினும் டெல்லியில், டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் தடை விதிக்கப்பட்டால், உரிமையாளர்கள் முழு வரியையும் செலுத்திய போதிலும், அந்தக் காலத்திற்கு மேல் தங்கள் கார்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்று அதிகாரிகள் கூறிவந்தாலும், இது பல வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பாமக: "என்னை நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை; அதனால்..." - எம்எல்ஏ அருள் சொல்வது என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க