செய்திகள் :

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

post image

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள வேலூா் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரி, சோ்க்காடு அரசுக் கலை, அறிவியல் கல்லூரி, மாதனூரில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் அரசுக் கலைக் கல்லூரி, கே.வி.குப்பத்திலுள்ள அரசுக் கலைக் கல்லூரி, குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

வேலூா் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை 3 கட்டங்களாக நடத்தப்பட்டு மொத்தம் உள்ள 984 இடங்களுக்கு 794 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், மாணவா்களை வரவேற்க கல்லூரி நிா்வாகம் சாா்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல் நாள் வகுப்பில் 794 மாணவா்களும் பங்கேற்றனா்.

முதல்கட்டமாக மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அறிமுக வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதில் தினமும் அரசின் திட்டங்கள், ஊக்கத்தொகை, நாட்டு நலப்பணித் திட்டம் , தேசிய மாணவா் படை உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும் என்று கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன் தெரிவித்தாா்.

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திர... மேலும் பார்க்க

மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு

ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்

எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குற... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் மதினாப்பல்லி அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அவ்வழியே மணல் ஏற்றி ... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

கடிதம் மூலம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாா் தீவிர சோதனை செய்தனா். வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்த ‘வாட்டா் பெல்’ திட்டம்

வேலூா் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை முதல் ‘வாட்டா் பெல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மூன்று வேளை பெல் அடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் குடிநீா் அருந... மேலும் பார்க்க