செய்திகள் :

'அஜித் மரணத்தின் முதல் குற்றவாளி ஸ்டாலின்தான்...' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

post image

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ தனிப்படை போலீசார் ஏன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அவர்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டது யார்? யார் அந்த விஐபி? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி. திருட்டு வழக்கை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது.

அஜித்குமார் மரணம்
அஜித்குமார் மரணம்

ஆனால் எதற்குத் தாக்கினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட நபர் வேறு இடத்தில் இருந்தால் தனிப்படை விசாரிக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது தனிப்படை ஏன் விசாரிக்க வேண்டும்.

எஸ்.பி-யை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசிற்கு உள்ளது. அஜித் குமாரை போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இது உண்மையா? இல்லையா? அவர் மீது மிளகாய்பொடி தூவி கொடூரமாகத் தாக்கி உள்ளனர் உண்மையா? இல்லையா? சாதரணமாக கூலிப்படை ஆட்கள் கூட இந்த மாதிரி கொடூரமானக் கொலையை செய்ய வாய்ப்பில்லை.

அஜித்குமாரின் கொலைக்கு அரசே பொறுப்பு என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அஜித்குமாரின் மரணத்திற்கு முதல் குற்றவாளியாகக் காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பு.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஆகவே அவரின் கையால் ஆகாத அரசு 25 லாக்அப் மரணங்களைத் தொடர்ந்து நடத்தி இருக்கின்ற அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பதிவு விலக வேண்டும். முதல் குற்றவாளி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு. ஸ்டாலின் வீட்டுக்குச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க