செய்திகள் :

மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!

post image

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் புதன்கிழமை பலியாகினார்.

மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ் மகன் அமரேஷ் (வயது 12). இவர் மன்னார்குடி புதிய புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து படித்து வந்தார். புதன்கிழமை காலை வழக்கம் போல் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அமரேஷ் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

ருக்மணி பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தனியார் திரையரங்கம் அருகே அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரி, நிலைதடுமாறி சிவகணேஷ் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் அமரேஷ் மீது ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல் நிலைய போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து அமரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிவகணேஷும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A student who was going to school with his father on a two-wheeler was killed on Wednesday when he was hit by a sand truck in Mannargudi, Tiruvarur district.

இதையும் படிக்க : 8 நாள்களில் 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்: புறப்பட்டார் பிரதமர் மோடி!

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

காவல் துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் பார்க்க