செய்திகள் :

அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க பணி - எங்கே தெரியுமா?

post image

தார் ரோட்டில் வாகனம் ஓட்டிகொண்டிருக்கிறீர்கள். அந்த ரோடு புதிதாக போட்டது தான். அதனால், எங்கேயும் மேடு, பள்ளம் இல்லை. ஆனால், ஒரே ஒரு பிரச்னை தான்.

அது அந்த ஸ்மூத்தான தார் ரோட்டில் அங்காங்கே மரங்கள் இருக்கும். அவ்வளவு தான். இது கற்பனை அல்ல.

பீகார் மாநிலத்தின் ஜெகனாபாத், பாட்னா-கயா பிரதான சாலையின் உண்மையான நிலை இது.

பீகார்
பீகார்

என்ன செய்தது மாவட்ட நிர்வாகம்?

இந்தப் பகுதியில் சாலையை விரிவுப்படுத்த, மரங்களை வெட்ட வனத்துறையின் அனுமதி தேவைப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது.

அதற்கு வனத்துறை, இங்கே வெட்டும் மரங்களுக்கு பதிலாக, வேறு பகுதியில் 14 ஹெக்டேர் நிலத்தை வன நிலமாக மாற்றி தர வேண்டும் என்று கூறியுள்ளது. வனத்துறையின் இந்த நிபந்தனையை மாவட்ட நிர்வாகத்தால் செய்துகொடுக்க முடியவில்லை.

அதனால், வேறு வழியில்லாமல், ரூ.100 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தி, மரங்களை அகற்றாமல் அப்படியே சாலையை விரிவுபடுத்தியுள்ளனர்.

வாகனோட்டிகளின் பயம்!

இந்த மரங்களும் நேர்கோட்டில் இல்லை. ஆங்காங்கே தான் இருக்கின்றன. இதனால், வாகனோட்டிகளுக்கு விபத்து ஏற்படுமோ என்று பயம் அதிகரித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல் குறித்த உங்களுடைய கருத்தை கமென்ட் செய்யுங்க மக்களே!

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க