செய்திகள் :

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன. இதில், புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரின் அறைகளோடு குடிமைப் பொருள் வழங்கல் துறை, கனிம வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நிலவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக முகவரிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் வந்தது. அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கும், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் புதிய, பழைய கட்டடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த அஞ்சல் முகவரி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

Summary

The Bomb Disposal Unit of the Coimbatore District Collector's Office has been raided after a bomb threat was made in a letter.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்: துணை முதல்வர்

வேலூர்: 30 சதவீத வாக்காளர்களை கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் ”ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பினை செயல்படுத்திட, திமுகவினர் அனைவரும் அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று ... மேலும் பார்க்க

எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும்.. என் கடன் பணி செய்து கிடப்பதே: முதல்வர் ஸ்டாலின்

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோ... மேலும் பார்க்க

அஜித்தின் சகோதரருக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் பணி

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தின் சகோதரர் நவீனுக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ந... மேலும் பார்க்க

உங்கள் வன்மம் எங்களை ஒன்றும் செய்யாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமரிசனம் செய்து கேலிச்சித்திரம் வெளியிடுவதாக முத... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்... மேலும் பார்க்க

பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: மோடிக்கு இபிஎஸ் நன்றி

தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்... மேலும் பார்க்க