செய்திகள் :

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்: துணை முதல்வர்

post image

வேலூர்: 30 சதவீத வாக்காளர்களை கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் ”ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பினை செயல்படுத்திட, திமுகவினர் அனைவரும் அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா மகள் வ.விஷ்ணுபிரியா – ஹெச்.சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்த திருமண விழாவில் துணை முதல்வர் பேசுகையில், வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதியின் செயலாளர் வன்னியராஜா மகள் விஷ்ணுபிரியா மற்றும் சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை உங்களின் முன்னிலையில் இன்றைக்கு நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எத்தனையோ முறை இந்த காட்பாடிக்கு நான் வருகை தந்திருக்கின்றேன். என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டது இந்த காட்பாடி தொகுதிதான். அந்த விதத்தில் நான் மீண்டும் இங்கு வருகை தந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

அது மட்டுமல்ல, இந்த காட்பாடி தொகுதிதான் நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளரை தந்திருக்கின்ற மண், இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த காட்பாடிக்கு வருகை தந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன். நேற்று இரவில் இருந்து சிறப்பான வரவேற்பை அளித்த வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் மாவட்ட கழகத்தை, மாநகர கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வன்னியராஜா் 1984 -ல் இருந்து கழகத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகின்றார். இப்படிப்பட்டவரின் குடும்பத்தின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்ற இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல, பொதுச்செயலாளருக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். இந்த திருமணத்திற்கு நான் வந்திருக்கக் கூடிய முழுகாரணம், முதல் காரணம் நம்முடைய பொதுச்செயலாளர்தான். சட்டப்பேரவையில் பேரவை உறுப்பினராக இருந்தேன், பிறகு அமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது பொதுச்செயலாளர் பின்னாடி 2 வரிசை தள்ளிதான் உட்கார்ந்து இருப்பேன். அதன் பிறகு கழகத் தலைவர் துணை முதலல்வர் பொறுப்பை கொடுத்தபோது எல்லோரும் வாழ்த்தினார்கள். நம்முடைய பொதுச்செயலாளரும் என்னை வாழ்த்தினார். வாழ்த்தும்போது இனிமே நீ என்னோட பக்கத்து சீட்தானே, வா, வா உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லிதான் வாழ்த்தினார்.

தற்போது கடந்த ஒன்பது மாதமாக சட்டப்பேரவை கூடும் போதெல்லாம் அவர் பக்கத்தில் தான் நான் உட்காரவேண்டும். அதில் கடந்த மூன்று மாதமாக இந்த திருமண விழாவிற்காக தேதி வாங்கி, அதை பாலேஅப் செய்து, இதை என்னிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது நம்முடைய பொதுச்செயலாளர். எனவே இந்த தேதியை வாங்கி மணமக்களை வாழ்த்துவதற்கான வாய்ப்பை அளித்த நம்முடைய பொதுச்செயலாளர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைக்கு இந்த திருமண விழா கிட்டத்தட்ட ஒரு பொதுக்கூட்டம் மாதிரி நிறையபேர் வந்திருக்கின்றீர்கள். நிறைய மகளிர் வந்திருக்கின்றீர்கள். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் இருந்தது. இன்றைக்கு இவ்வளவு பெண்கள் வந்திருக்கின்றீர்கள் என்றால் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர், இவங்க எல்லாம் கண்ட கனவுதான் காரணம். இதற்கெல்லாம் திட்டம் தீட்டியது நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர். அவற்றை எல்லாம் செய்து காட்டி கொண்டிருப்பது நம்முடைய தலைவர். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் படிக்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு திட்டமாக நம்முடைய தலைவர் அவர்கள் செய்து கொண்டிருகின்றார். இந்த திட்டங்களை பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருத்தருக்கும் உள்ளது. அதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நம்முடைய தலைவர் அவர்கள் நாளை முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை தொடங்கியிருக்கின்றார். ஒவ்வொரு பூத்திலயும் இருக்கின்ற 30 சதவீத வாக்காளர்களை நம்முடைய கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை தீட்டியிருக்கின்றார். இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டுமென்றால் இங்கு வந்திருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் நம்முடைய அரசினுடைய தூதுவர்களாக செயல்பட்டு அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

மணமக்களுக்கு நம்முடைய தலைவர் சொல்வது போல ஒரே ஒரு வேண்டுகோள்தான். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த திருமண விழாவில் கழகத்தின் பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும்.. என் கடன் பணி செய்து கிடப்பதே: முதல்வர் ஸ்டாலின்

Summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin appealed to DMK members to take the government's plans to the people.

எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும்.. என் கடன் பணி செய்து கிடப்பதே: முதல்வர் ஸ்டாலின்

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோ... மேலும் பார்க்க

அஜித்தின் சகோதரருக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் பணி

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தின் சகோதரர் நவீனுக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ந... மேலும் பார்க்க

உங்கள் வன்மம் எங்களை ஒன்றும் செய்யாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமரிசனம் செய்து கேலிச்சித்திரம் வெளியிடுவதாக முத... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்... மேலும் பார்க்க

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதிய... மேலும் பார்க்க

பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: மோடிக்கு இபிஎஸ் நன்றி

தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்... மேலும் பார்க்க