செய்திகள் :

அஜித்தின் சகோதரருக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் பணி

post image

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தின் சகோதரர் நவீனுக்கு கூட்டுறவு பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் நேரில் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் என்பவரின் குடும்பத்தாரிடம், செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து,  முதல்வரின் உத்தரவிற்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், புதன்கிழமை (ஜூலை 2) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு (27) , சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட், காரைக்குடி டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.

மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட புல எண். 40-11-ன் படி 0.01.20 ஏர்ஸ் (3 சென்ட்) பரப்பளவில், அஜித்குமார் தாயார் மாலதிக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் வட்டாட்சியர் திரு.விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Summary

Ajith Kumar's younger brother gets a government job! He gets a free house and plot!

போலீஸ் தாக்கியதில் பலியான அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்: துணை முதல்வர்

வேலூர்: 30 சதவீத வாக்காளர்களை கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் ”ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பினை செயல்படுத்திட, திமுகவினர் அனைவரும் அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று ... மேலும் பார்க்க

எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும்.. என் கடன் பணி செய்து கிடப்பதே: முதல்வர் ஸ்டாலின்

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோ... மேலும் பார்க்க

உங்கள் வன்மம் எங்களை ஒன்றும் செய்யாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை விமரிசனம் செய்து வார பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம்(கார்ட்டூன்) வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமரிசனம் செய்து கேலிச்சித்திரம் வெளியிடுவதாக முத... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கை நாடு கடத்த முடிவா..? டிரம்ப் கூறுவதென்ன?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. வரிகுறைப்பு மற்றும் செலவின மசோதாக்கள் குறித்து விமர்சித்த ஸ்... மேலும் பார்க்க

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதிய... மேலும் பார்க்க

பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: மோடிக்கு இபிஎஸ் நன்றி

தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்... மேலும் பார்க்க