செய்திகள் :

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

post image

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு சேலத்துக்கு மறுநாள் காலை 6 மணிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22153), சேலம் டவுன் ரயில் நிலையத்தில் வழக்கமாக அதிகாலை 5.34 மணிக்கு நின்று 5.35 மணிக்கு செல்லும்.

இந்த ரயில் ஜூலை 4-ஆம் தேதியிலிருந்து சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5.32 மணிக்கு வந்து பிறகு 5.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில் சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22154) வழக்கமாக இரவு 11.39 மணிக்கு வந்து பிறகு 11.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரவு 11.37 மணிக்கு டவுன் ரயில் நிலையத்துக்கு வந்து பிறகு 11.40 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் புதன்கிழமை பலியாகினார்.மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ் மகன... மேலும் பார்க்க

போலீஸ் தாக்கியதில் பலியான அஜித்தின் தம்பிக்கு அரசுப்பணி!

காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.அஜித் குமாரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சரக்கு மற... மேலும் பார்க்க