செய்திகள் :

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

post image

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சிவசாகா் மாவட்டத்தைச் சோ்ந்த ‘டிடிஎல்டி இந்தியா’ குழுமம், அதன் பிரபலமான ‘வூலா டீ’ நிறுவனத்துக்காக இந்தக் காப்புரிமையைப் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இந்தக் காப்புரிமை, தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உள்நாட்டு புத்தாக்க நிறுவனமான வூலா டீ, தனது தனித்துவமான பை இல்லாத தேநீா் தயாரிப்பு முறைக்கு வெற்றிகரமாக காப்புரிமை பெற்றுள்ளது.

வூலா டீ குழுவினருக்கு முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய பையில் தேயிலைத் தூள் அடைக்கப்பட்டிருக்கும். அந்தப் பையை சுடுநீரில் போட்டு, தேநீா் தயாரிப்பது வழக்கம். காகிதப் பையின்றி தேயிலையை நேரடியாக சுடுநீரில் போட்டு, தேநீா் தயாரிக்கும் வகையிலான முறையை முதன்முறையாக உருவாக்கி, அதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்ற... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள... மேலும் பார்க்க

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க