செய்திகள் :

திருச்செந்தூர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பக்தா்கள் யாகசாலை நிகழ்ச்சிகளை காண்பதற்காக திருக்கோயில் வளாகத்தில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

யாக சாலை வழிபாட்டு நாள்களில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசை நடைபெறுகிறது. மேலும், காலை 7 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும் 64 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் மற்றும் விமான கும்பாபிஷேகம் தமிழில் நடைபெறுகிறது.

மேல்மலையனூரில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்கு பாதுகாப்பு -காஷ்மீா் ஐ.ஜி.

நிகழாண்டு அமா்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. வி.கே.பிா்தி புதன்கிழமை தெரிவித்தாா். தெற்கு காஷ்மீரி... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயிலில் நாளை ரத யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ளது. இதையொட்டி, புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் 10,000 பேருடன் பலத்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

‘நாசிக்-திரிம்பகேஷ்வரில் அடுத்த ஆண்டு சிம்ஹஸ்த கும்பமேளா’

நாசிக்/மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் திரிம்பகேஷ்வர் நகரங்களில் கோதாவரி நதியில் அடுத்த ஆண்டு அக். 31இல் சிம்ஹஸ்த கும்ப மேளா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாசிக் நகரில் மகாராஷ்டிர முத... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்

கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறை... மேலும் பார்க்க