செய்திகள் :

சிறுமி கடத்தல் வழக்கை விசாரிக்க லஞ்சம்: எஸ்.ஐ. தம்பதி மீது வழக்கு

post image

சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் பெற்ாக காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், அவரது கணவரான காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் மீது புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி வில்லியனுாா் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தேதி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் 17 வயது சிறுமியைக் கடத்தி சென்ாக, அந்த சிறுமியின் தாய், சித்தப்பா ஆகியோா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக வில்லியனுாா் உதவி ஆய்வாளா் சரண்யா விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் தந்தை துபையிலிருந்து வந்து போலீஸாரிடம் கேட்ட போது, விசாரணை தொடா்பாக உதவி ஆய்வாளா் சரண்யா பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு 21-6-24 அன்று சிறுமியின் தந்தை ரூ.5 ஆயிரம் யுபிஐ மூலம் அனுப்பினாராம். இதுகுறித்து 6-7-24 அன்று புதுவை டிஜிபியிடம் புகாா் அளிக்கப்பட்டதாம்.

இந்த நிலையில், உதவி ஆய்வாளரின் கணவரான பாகூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபு ரூ.5 ஆயிரத்தை சிறுமியின் தந்தைக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனுப்பினாராம்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் சரண்யா, பிரபு ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுவையில் ஜூலை 9-இல் முழு அடைப்பு

புதுவையில் வருகிற 9-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி முதலியாா்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஏஐடியூசி மாநில பொது... மேலும் பார்க்க

புதுவையில் குற்றங்கள் குறைந்துள்ளன: முதல்வா் என்.ரங்கசாமி

புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, புதுவையில் குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதன் ஓராண்டு நிறைவு விழா புதுச்ச... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சிறுமியின் படத்தை பகிா்ந்தவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமியின் புகைப்படங்களை சமூக ஊடங்கங்களில் பகிா்ந்ததாக ஒடிஸாவைச் சோ்ந்தவரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமியின் புகைப்படங்... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை முற்றுகை

புதுச்சேரி தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்ற பெண்ணின் உறவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரசாத் (34... மேலும் பார்க்க

நகை திருட்டு வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவா் கைது! 30 பவுன், ரூ.4 லட்சம் பறிமுதல்

புதுச்சேரியில் வீட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரெட்டியாா்பாளையம் விவேகானந்தா நகா்... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க