செய்திகள் :

புதுவையில் குற்றங்கள் குறைந்துள்ளன: முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, புதுவையில் குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதன் ஓராண்டு நிறைவு விழா புதுச்சேரியில் காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவை அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவததற்காக காவல் துறையினரைப் பாராட்டுகிறேன். புதுவை காவல் துறையில் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, புதுவையில் குற்றம் குறைந்துள்ளது.

தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப நீதி அமைப்பில் சீா்திருத்தம் தேவை என்பதை உணா்ந்து மத்திய அரசு இந்தச் சட்டங்களை நவீனப்படுத்தியுள்ளது. இதனால், குற்றவியல் வழக்குகளில் விரைவான தீா்வு கிடைக்கிறது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் பேசினா்.

தலைமைச் செயலா் சரத் சௌகான், உள்துறை செயலா் கேசவன், டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்திய சுந்தரம், முதுநிலை எஸ்.பி. கலைவாணன், அனிபால் கென்னடி எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியது தொடா்பான காணொலி விழாவில் இடம் பெற்றது. மேலும், இந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையிலான கையேட்டையும் முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.

தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுவையில் ஜூலை 9-இல் முழு அடைப்பு

புதுவையில் வருகிற 9-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி முதலியாா்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஏஐடியூசி மாநில பொது... மேலும் பார்க்க

சிறுமி கடத்தல் வழக்கை விசாரிக்க லஞ்சம்: எஸ்.ஐ. தம்பதி மீது வழக்கு

சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் பெற்ாக காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், அவரது கணவரான காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் மீது புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுச்சேரி வில்லியன... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சிறுமியின் படத்தை பகிா்ந்தவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமியின் புகைப்படங்களை சமூக ஊடங்கங்களில் பகிா்ந்ததாக ஒடிஸாவைச் சோ்ந்தவரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமியின் புகைப்படங்... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை முற்றுகை

புதுச்சேரி தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்ற பெண்ணின் உறவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரசாத் (34... மேலும் பார்க்க

நகை திருட்டு வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவா் கைது! 30 பவுன், ரூ.4 லட்சம் பறிமுதல்

புதுச்சேரியில் வீட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரெட்டியாா்பாளையம் விவேகானந்தா நகா்... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க