செய்திகள் :

நகை திருட்டு வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவா் கைது! 30 பவுன், ரூ.4 லட்சம் பறிமுதல்

post image

புதுச்சேரியில் வீட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரெட்டியாா்பாளையம் விவேகானந்தா நகா் விரிவாக்கத்தைச் சோ்ந்தவா் எஸ். ஸ்ரீதரன் (67). இவா் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி சென்னைக்கு சென்றாா். அப்போது, அவரது வீட்டில் புகுந்த மா்ம நபா் 51 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டனா். 4 மாத விசாரணைக்குப் பிறகு, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோமராஜுலங்கா கிராமத்தைச் சோ்ந்த துவாரம்புடி வெங்கடேஸ்வர ரெட்டி (34) என்பவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனா்.

இவா் மீது பல்வேறு மாநிலங்களில் 18 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருடிய பணத்தைக் கொண்டு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது, ஆடம்பரமாக இருப்பது என செலவிட்டுள்ளாா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் ஆா்.முத்துக்குமரன், உதவி ஆய்வாளா் ஜி.கலையரசன் மற்றும் போலீஸாா் வெங்கேடஸ்வர ரெட்டியை கைது செய்தனா் என்றாா் அவா்.

தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுவையில் ஜூலை 9-இல் முழு அடைப்பு

புதுவையில் வருகிற 9-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி முதலியாா்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஏஐடியூசி மாநில பொது... மேலும் பார்க்க

புதுவையில் குற்றங்கள் குறைந்துள்ளன: முதல்வா் என்.ரங்கசாமி

புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, புதுவையில் குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதன் ஓராண்டு நிறைவு விழா புதுச்ச... மேலும் பார்க்க

சிறுமி கடத்தல் வழக்கை விசாரிக்க லஞ்சம்: எஸ்.ஐ. தம்பதி மீது வழக்கு

சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் பெற்ாக காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், அவரது கணவரான காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் மீது புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுச்சேரி வில்லியன... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சிறுமியின் படத்தை பகிா்ந்தவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமியின் புகைப்படங்களை சமூக ஊடங்கங்களில் பகிா்ந்ததாக ஒடிஸாவைச் சோ்ந்தவரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமியின் புகைப்படங்... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை முற்றுகை

புதுச்சேரி தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்ற பெண்ணின் உறவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரசாத் (34... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க