செய்திகள் :

‘நாசிக்-திரிம்பகேஷ்வரில் அடுத்த ஆண்டு சிம்ஹஸ்த கும்பமேளா’

post image

நாசிக்/மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் திரிம்பகேஷ்வர் நகரங்களில் கோதாவரி நதியில் அடுத்த ஆண்டு அக். 31இல் சிம்ஹஸ்த கும்ப மேளா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசிக் நகரில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் நடைபெற்ற துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கதாக இருக்கும் என்று ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

அதன்படி, திரிம்பகேஷ்வரிலும் நாசிக்கின் ராம்குண்ட் பகுதியிலும் அடுத்த ஆண்டு அக். 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிம்ஹஸ்த கும்பமேளா தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து 2027ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நகர பிரதட்சிணம் நிகழ்வு நடைபெறும். 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அமிர்த ஸ்னானமும், ஆகஸ்ட் 31ஆம் தேதி இரண்டாவது அமிர்த ஸ்னானமும் நடைபெறும். மூன்றாவது அமிர்த ஸ்னானம், 2027இல் நாசிக் நகரில் செப்டம்பர் 11ஆம் தேதியும், திரிம்பகேஷ்வர் நகரில் செப்டம்பர் 12ஆம் தேதியும் நடைபெறும்.

2028ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு, சிம்ஹஸ்த கும்பமேளா முடிவுக்கு வரும். சிம்ஹஸ்த கும்பமேளா என்பது மகாராஷ்டிரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும்.

முந்தைய சிம்ம ஹஸ்த கும்பமேளா நாசிக்கிலும், திரிம்பகேஷ்வரிலும் கடந்த 2015-16ஆம் ஆண்டு நடைபெற்றது. நாசிக்}திரிம்பகேஷ்வர் கும்ப மேளாவில் வைஷ்ணவ மடாதிபதிகளும், சைவ மடாதிபதிகளும் தனித்தனியாக புனித நீராடுவது வழக்கம்.

இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிம்ஹஸ்த கும்பமேளா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 13 முக்கிய மடங்களின் பீடாதிபதிகளும், புரோகிதர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கும்பமேளாவை நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.

இதற்காக ரூ.4,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 2,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்படும். கும்பமேளாவுக்காக கழிவுநீர் சுத்திகரிப்பு, கோதாவரி நதியை சுத்தப்படுத்துவது, துறவிகள் தங்குவதற்கான கிராமத்தை அமைப்பது ஆகியவற்றுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்

கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறை... மேலும் பார்க்க

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா: மே 31 கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகே காளையார்கோவிலில் அமைந்துள்ள சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவில் வைகாசி விசாகத்திருவிழா மே 31 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறு... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஜூன் 1 தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசித்திருவிழா ஜூன்1 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் விரைவில் அா்ச்சகா் நியமனம்

ஆகம விதிகள் இல்லாத திருக்கோயில்களில் அா்ச்சகா்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீ... மேலும் பார்க்க

பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று(மே 4) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ... மேலும் பார்க்க