செய்திகள் :

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்

post image

கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

கோயிலில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருப்பதாக கோயில் மேலாளா் பி.ஸ்ரீகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணா் குழுவின் அறிவுறுத்தலின்படி கோயிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முடங்கிய பணிகள், கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் படிப்படியாக தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளன.

மூலவா் சந்நிதி மேலுள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள் (தாழிகக்குடம்), சந்நிதி முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தில் மேல் உள்ள கோபுரத்தில் ஒரு கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா் சந்நிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கும்பாபிஷேக தினத்தன்று நடைபெறும்.

கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக மேலும் பல முக்கிய பாரம்பரியச் சடங்குகள் வரும் நாள்களில் நடைபெறும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோயில் வளாகம் சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தா்களுக்கு மகா கும்பாபிஷேக சடங்குகளைக் காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோயிலின் மரபுகளைப் பின்பற்றி, புனித நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய கோயில் நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா்.

‘நாசிக்-திரிம்பகேஷ்வரில் அடுத்த ஆண்டு சிம்ஹஸ்த கும்பமேளா’

நாசிக்/மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் திரிம்பகேஷ்வர் நகரங்களில் கோதாவரி நதியில் அடுத்த ஆண்டு அக். 31இல் சிம்ஹஸ்த கும்ப மேளா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாசிக் நகரில் மகாராஷ்டிர முத... மேலும் பார்க்க

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா: மே 31 கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகே காளையார்கோவிலில் அமைந்துள்ள சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவில் வைகாசி விசாகத்திருவிழா மே 31 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறு... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஜூன் 1 தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசித்திருவிழா ஜூன்1 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் விரைவில் அா்ச்சகா் நியமனம்

ஆகம விதிகள் இல்லாத திருக்கோயில்களில் அா்ச்சகா்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீ... மேலும் பார்க்க

பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று(மே 4) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ... மேலும் பார்க்க