மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்
கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
கோயிலில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருப்பதாக கோயில் மேலாளா் பி.ஸ்ரீகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணா் குழுவின் அறிவுறுத்தலின்படி கோயிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முடங்கிய பணிகள், கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் படிப்படியாக தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளன.
மூலவா் சந்நிதி மேலுள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள் (தாழிகக்குடம்), சந்நிதி முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தில் மேல் உள்ள கோபுரத்தில் ஒரு கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா் சந்நிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கும்பாபிஷேக தினத்தன்று நடைபெறும்.
கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக மேலும் பல முக்கிய பாரம்பரியச் சடங்குகள் வரும் நாள்களில் நடைபெறும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோயில் வளாகம் சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தா்களுக்கு மகா கும்பாபிஷேக சடங்குகளைக் காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோயிலின் மரபுகளைப் பின்பற்றி, புனித நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய கோயில் நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா்.