செய்திகள் :

`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

post image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - அண்ணாதுரை, தென்காசி’ என்கிற முகவரியில், அவரின் செல்நெம்பரையும் குறிப்பிட்டு ஒரு கடிதம் ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தது. அதில், மிரட்டும் தொனியில் ஆட்சியர் அலுவலகத்தில் `வெடிகுண்டு வச்சிருக்கோம்..’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, எஸ்.பி அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி மதிவாணன் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் `அக்னி’யை அழைத்துக்கொண்டு 6 பேர்க்கொண்ட வெடிகுண்டு நிபுணர் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைந்துசென்றனர். ஆட்சியரின் அறை உட்பட இரண்டாவது தளம், தரைத்தளம் என கட்டடத்தை முழுவதுமாக சோதனை செய்தனர்.

மோப்ப நாய் அக்னி உதவியுடன் சோதனை

அதில், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு மோப்ப நாய் அக்னியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்நெம்பரை தொடர்புகொண்டு போலீஸார் விசாரித்தபோது, எதிர் முனையில் பேசிய அந்த நபர் `சார்... எனக்கும் அந்த கடிதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ எனக்கு ஆகாத ஆளுங்க என்னை சிக்க வைக்கிறதுக்காக என்னோட பெயரையும், செல்நெம்பரையும் போட்டு இப்படி கலெக்டர் ஆபீஸுக்கு அனுப்புறாங்க. ஏற்கெனவே, ரெண்டு மூணு முறை வேறு கலெக்டர் ஆபீஸுக்கும் இப்படித்தான் அனுப்பியிருக்கிறாங்க...’ என்று கதறினார். `அட பாவமே..’ என்று வருத்தப்பட்ட காவல்துறையினர் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அனுப்பியது யார்? என்பதைக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ்

வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த... மேலும் பார்க்க

`திருட்டு நகையை பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தி போலீஸார் கொள்ளையடிக்கின்றனர்'- நகை வியாபாரிகள் குமுறல்

தஞ்சாவூர், தென் கீழ் அலங்கம், பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வந்த பெரம்லுார் போலீஸார் சரவணனை வேனில் அழைத்து சென... மேலும் பார்க்க

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோ... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி-யை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? - உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் - மத்திய பிரதேச கொடூரம்

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி தி... மேலும் பார்க்க