செய்திகள் :

வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ்

post image

வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர் மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர். இதனை அறிந்த இளைஞர் இவர்களிடமிருந்து தப்பிக்க நேரடியாக வேலூர் கோட்டையின் நீர் தேங்கும் அகழியில் குதித்துள்ளார். முழங்கால் வரைக்கும் தண்ணீர் இருக்கும் ஆழம் குறைவான பகுதியில் குதித்துள்ளார் அந்த இளைஞர். 

உடனடியாக பொது மக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை மீட்க, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வேலூர் கோட்டையின் அகழியில் ஆழமே இல்லாத பகுதியில் குத்தித்துவிட்டு தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட, தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் கயிறு போட்டு அவரை பிடித்தனர். விசாரணையில், கோழி என்கிற கோபி வேலூர், விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் வேலூர் கோட்டை அகழியில் பிடிபட்ட இளைஞரை, வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கைது செய்தனர். வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

வேலூர் கோட்டையின் உள்ளே நடக்கும் திருட்டு சம்பவங்கள் குறித்து பொது மக்களிடம் கேட்டபோது, “வேலூர் கோட்டையின் உள்ளே சுற்றலா பயணிகளிடம் திருட்டு, வழிப்பறி என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க 6 மாதங்களுக்கு முன்பு வரை கோட்டையின் உள்ளேயே காவல் உதவி மையம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது காவல் உதவி மையம் செயல்பாட்டில் இல்லை. எனவே காவல் உதவி மையத்தை மீண்டும் வேலூர் கோட்டையில் உள்ளே செயல்படுத்தினால் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும்” என்றனர்.

நடவடிக்கை எடுப்பார்களா காவல்துறையினர்? 

`திருட்டு நகையை பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தி போலீஸார் கொள்ளையடிக்கின்றனர்'- நகை வியாபாரிகள் குமுறல்

தஞ்சாவூர், தென் கீழ் அலங்கம், பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 24ம் தேதி விசாரணைக்கு வந்த பெரம்லுார் போலீஸார் சரவணனை வேனில் அழைத்து சென... மேலும் பார்க்க

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோ... மேலும் பார்க்க

`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - ... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி-யை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? - உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் - மத்திய பிரதேச கொடூரம்

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி தி... மேலும் பார்க்க