செய்திகள் :

காவல் விசாரணையில் மரணம்: “இது 25-வது முறை...” -எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

post image

காவல் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் இன்று(ஜூலை 1) தொலைபேசி வழியாக அறுதல் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு. க. ஸ்டாலிலின் பேச்சில் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: “முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்!கொலை செய்தது உங்கள் அரசு. "மன்னித்து விடுங்கள்" என்பதுதான் உங்கள் பதிலா?

அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் முதல்வருக்கு?

முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?”

“என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ? வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?

அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு எஃப்.ஐ.ஆர்., கைது எல்லாம் நடக்கிறது.”

“உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?

"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!” என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சரக்கு மற... மேலும் பார்க்க

புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரன் யாா், யாரிடம் பேசினாா் என்ற ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை செ... மேலும் பார்க்க

ஜூலை 5-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சாா்பில் ஜூலை 5-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் த... மேலும் பார்க்க

4 நாள் பயணமாக தில்லி சென்றாா் ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா். சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு ஏா் இந்தியா விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றாா். ஒரே வாரத்தில், 2-ஆவது மு... மேலும் பார்க்க

உணவின் தரம்: வாட்ஸ்ஆப் புகாா் சேவை நிறுத்தம்

உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகாரளிக்கும் சேவையை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில், செயலி மற்றும் மின்னஞ்சல் மூலமாக வழக்கம்... மேலும் பார்க்க