செய்திகள் :

மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

post image

அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரன் யாா், யாரிடம் பேசினாா் என்ற ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி வழக்குரைஞா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிா் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவா் யாா், யாரிடம் பேசினாா் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு அழைப்பாணை அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இதேபோல வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும். இதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

ஞானசேகரனுக்கு எதிரான வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றமும் தீா்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மனுதாரா் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாதுஎனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் புதன்கிழமை பலியாகினார்.மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ் மகன... மேலும் பார்க்க

போலீஸ் தாக்கியதில் பலியான அஜித்தின் தம்பிக்கு அரசுப்பணி!

காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.அஜித் குமாரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க