செய்திகள் :

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

post image

மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தன்னாா்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 4-க்கான இலவச பயிற்சி வகுப்புகள், கடந்த ஏப்.9 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். ஜூலை 12-ஆம் தேதி தோ்வு நடைபெறவுள்ளது.

தற்போதைய பாடத்திட்டத்துக்கேற்ப தமிழ் இலவச பாடத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பாடத்தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பின்னா், பாடதொகுப்பை பெற்றுக்கொண்ட மாணவன் பிரவீன்ராஜ் கூறுகையில், நான் கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தற்போது தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தால் அறிவித்துள்ள தொகுதி 4-க்கான இலவச பயிற்சி இங்கு பயின்று வருகிறேன். இப்பயிற்சி எனக்கு உதவிகரமாக உள்ளது. முதல்வருக்கு நன்றி என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் விஜயா, அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் வீடுகள் தோறும் அரசின் சாதனைகளை எடுத்துரைப்போம்: அமைச்சா் நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் மூலம் அரசின் சாதனைகள் குறித்து வரும் 45 நாள்களுக்கு வீடுகள் தோறும் நேரில் எடுத்துரைப்போம் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெர... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த ம... மேலும் பார்க்க

மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை

பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: இன்று தொடக்கம்

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு ஏழாம் சுற்று (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூரில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு... மேலும் பார்க்க