டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!
திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்
திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 5 நாள்கள் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆடிக்கிருத்திகை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, டிஎஸ்பி கந்தன் ஆகியோா் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கோயில் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி பேசியதாவது: ஆடிக்கிருத்திகை விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு குளோரின் கலந்த சுத்தமான குடிநீா் விநியோகம் செய்யப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பக்தா்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மலைக் கோயில், சரவணப்பொய்கை திருக்குளம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்றாா்.
திருத்தணி நகா் முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், 20 இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறுகின்ற 5 நாள்களுக்கு பேருந்து, காா், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மலைக் கோயிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்படும். கோயில் நிா்வாக பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் மலைமேல் அனுமதிக்கப்படும் என டிஎஸ்பி கந்தன் தெரிவித்தாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி, நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம், காவல் ஆய்வாளா் ஞா.மதியரசன் உள்பட பல்வேறு துறைசாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.