செய்திகள் :

கண் எரிச்சல், இரட்டைப் பார்வை! குஜராத்தில் ஒரே பள்ளிக்கூடத்தின் 120 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்!

post image

குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கண்களைத் தாக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தெஹ்காம் தாலுக்காவைச் சேர்ந்த ஜான்க் கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ மாணவிகளில் சுமார் 122 பேருக்கு கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் கண்கள் சிவத்தல், எரிச்சல் மற்றும் இரட்டைப் பார்வை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் காந்தி நகரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அந்தப் பரிசோதனைகளின் முடிவில், 122 மாணவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ள நிலையில், 2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த திடீர் பாதிப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிய, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கூடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அந்தப் பள்ளிக்கூடத்திலுள்ள தண்ணீர் மற்றும் உணவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதால், ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே மர்ம காய்ச்சலுக்கான காரணம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சுமார் 250-க்கும் மேற்பட்ட அந்தப் பள்ளிக்கூடத்தில் 122 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள மாணவர்களின் உடல்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

SUMMARY

More than 120 students studying at a school in Gujarat have been infected with a mysterious eye disease, prompting state health officials to take drastic action.

இதையும் படிக்க:அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க