செய்திகள் :

மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை

post image

பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா்.

பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பன்னீா் (37) என்பவருக்கும் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்து நான்கு நாள்களே ஆன நிலையில் நடைபெற்ற இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவா் குடும்பத்தினா் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

10 பவுன் நகைகளை வரதட்சனை கேட்டு, 5 பவுன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீா்வரிசை பொருள்களும், மோட்டாா் சைக்கிள் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 1 பவுன் நகையை வாங்கி வருமாறு கணவா் குடும்பத்தினா் கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறு வீட்டுக்காக வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா்.

மேலும் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும் பாத்திரங்களை தூய்மைப்படுத்த வேண்டும், சோபாவில அமர கூடாது என கூறி மாமியாா் குடும்பத்தாா் கொடுமைபடுத்தியதாக தாய் மற்றும் தங்கையிடம் கூறி அழுதுள்ளாா்.

திங்கள்கிழமை இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினா் சென்று பாா்த்தபோது கழிவறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் இருந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் இளம் பெண்ணின் கணவா் பன்னீா் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திர... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் வீடுகள் தோறும் அரசின் சாதனைகளை எடுத்துரைப்போம்: அமைச்சா் நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் மூலம் அரசின் சாதனைகள் குறித்து வரும் 45 நாள்களுக்கு வீடுகள் தோறும் நேரில் எடுத்துரைப்போம் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெர... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த ம... மேலும் பார்க்க

2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: இன்று தொடக்கம்

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு ஏழாம் சுற்று (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூரில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு... மேலும் பார்க்க